Published : 26 Jun 2015 10:41 AM
Last Updated : 26 Jun 2015 10:41 AM

உலக மசாலா: கொக்கு நடனம்!

அமெரிக்காவில் வசிக்கும் ஜார்ஜ் ஆர்ச்சிபல்ட், விருது பெற்ற பறவையியலாளர். அரிய வகை கொக்கு ஒன்றுக்காகத் தன் வாழ்நாளில் 3 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். 1976ம் ஆண்டு அண்டோனியோ உயிரியல் பூங்காவில் டெக்ஸ் என்ற ஒரே ஒரு பெண் கொக்கு மட்டும் இருந்தது. உலகம் முழுவதும் இருந்த 100 கொக்குகளில் இதுவும் ஒன்று.

பூங்கா நிர்வாகிகள் டெக்ஸை இனப்பெருக்கம் செய்ய விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் தன்னுடைய பொறுப்பில் டெக்ஸை எடுத்துக்கொண்டார். ஜார்ஜும் டெக்ஸும் மிக நெருங் கிய நண்பர்களாக மாறினார்கள். இனப் பெருக்க காலம் வந்தது. கொக்குகள் நடனமாடுவது போலவே டெக்ஸோடு சேர்ந்து நடனமாடினார் ஜார்ஜ். டெக்ஸ் மகிழ்ச்சி அடைந்தது. ஒரு முட்டை இட்டது.

ஆனால் அந்த முட்டை குஞ்சு பொரிக்கும் அளவுக்கு இல்லை. அடுத்த ஆண்டு இனப் பெருக்க காலம் வரை காத்திருந் தார் ஜார்ஜ். மீண்டும் கொக்குடன் நடனமாடினார். முட்டையிட்டு, அடை காத்தது டெக்ஸ். ஆனால் முட்டையிலிருந்து இறந்த குஞ்சுதான் வெளிவந்தது. மூன்றாவது ஆண்டு மீண்டும் டெக்ஸ் முட்டை இட்டது.

இந்த முறை முட்டையை செயற்கையாக அடை காத்தனர். முட்டையிலிருந்து குஞ்சு வெளி வந்தது. ‘கீ விஸ்’ என்று பெயர் சூட்டினார் ஜார்ஜ். விரைவிலேயே டெக்ஸ் இறந்து போனது. ஆனால் டெக்ஸின் இனப்பெருக்கத்தால் அரிய கொக்குகள் இன்றும் உலகில் உள்ளன. அரிய கொக்கின் இனத்தைக் காப்பாற்றி, எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த ஜார்ஜுக்கு ஏகப்பட்ட விருதுகளும் பணமும் வழங்கப்பட்டன. கொக்கு பாதுகாப்பு மையத்தில் வேலை செய்து வரும் ஜார்ஜ் வட கொரியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், க்யூபா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, கொக்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறார்.

உங்கள் அரிய சேவை தொடரட்டும் ஜார்ஜ்!

ஸ்காட்லாந்தின் மேற்கு டன்பர்ட்டோன்ஷயர் பகுதியில் இருக்கும் 50 அடி பாலத்தை ‘தற்கொலை பாலம்’ என்று அழைக்கிறார்கள். இதுவரை 600 நாய்கள் அந்தப் பாலத்தில் இருந்து குதித்துவிட்டதாகவும், அதில் 50 நாய்கள் இறந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். பாலத்தின் ஆரம்பத்திலேயே நாய்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை இருக்கிறது.

அடர்ந்த மரங்களும் அமானுஷ்ய அமைதியும் அங்கே நிலவுகிறது. 1994ம் ஆண்டு கெவின் மோய் என்பவர் தன் குழந்தையுடன் குதித்து, இறந்து போனார். அதிலிருந்து அந்த இடத்துக்கு வரும் நாய்கள் எல்லாம் குதித்து விடுவதாகச் சொல்கிறார்கள். கால்நடை மருத்துவர் டேவிட் சாண்ட்ஸ், இது தற்செயலான நிகழ்வுதான் என்கிறார்.

’’எந்த நாயும் உயிரை விடுவதற்காக அங்கே குதிக்கவில்லை. ஏதோ ஆர்வத்தில் குதித்திருக்கலாம். எனக்கே அந்தப் பகுதி ரொம்ப விநோதமான அனுபவத்தைத் தந்தது. அதேபோல நாய்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். 600 நாய்கள் குதித்திருக்கின்றன என்பதெல்லாம் மக்களின் கட்டுக்கதை’’ என்கிறார் டேவிட் சாண்ட்ஸ்.

டிமாண்டி பாலம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x