Published : 01 Jun 2015 03:47 PM
Last Updated : 01 Jun 2015 03:47 PM
ஈரானின் அணுசக்தி நிலையம் உள்ள புஷேர் என்ற இடத்துக்கு 110 கிமீ வடமேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 என்று பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.
இமாம் ஹசன் என்ற ஊரில் இந்த மிதமான நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இன்று உள்ளூர் நேரப்படி இன்று காலை 4.30 மணியளவில் பூமி சற்றே ஆடியுள்ளது.
புஷேர் அணு உலை ரஷ்யாவின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ரிக்டர் அளவில் 8 என்று தாக்கம் ஏற்படும் பூகம்பத்தையும் தாங்குமாறு இந்த அணு சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட இதே இடத்தை மையமாகக் கொண்டு 2013-இல் ஏற்பட்ட 6.1 நிலநடுக்கத்திற்கு 37 பேர் பலியாயினர்.
2003-ம் ஆண்டு உலகை உலுக்கிய பூகம்பத்தில் ஈரானில் 26,000 பேர் பலியாயினர், பாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமே தரைமட்டமானது குறிப்பிடத்தகக்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT