Published : 13 May 2015 11:58 AM
Last Updated : 13 May 2015 11:58 AM
நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8,216 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து நேற்று (செவ்வாய்கிழமை) மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த இரண்டும் பெரிய நிலநடுக்கத்திலும் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 8,216 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது. நேற்றைய நிலநடுக்கத்தில் மட்டும் 1,200 பேர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT