Last Updated : 10 Apr, 2015 04:17 PM

 

Published : 10 Apr 2015 04:17 PM
Last Updated : 10 Apr 2015 04:17 PM

தென் ஆப்பிரிக்கா: 4 வயது பேரனை கொலை செய்து இந்திய முதியவர் தற்கொலை

தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயது முதியவர் தனது 4 வயது பேரனை காரில் அழைத்துச் சென்று காரைத் தீப்பிடிக்கச் செய்து பேரனுடன் பலியானார்.

ஜொகான்னஸ்பர்க் நகருக்கு மேற்கேயுள்ள ஆசாத்வில் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜுகுத்லே பெர்சாத் என்ற இந்த 64 வயது இந்தியர், தனது மகள் மற்றும் மருமகன் ஆகியோரை சம்பவத்துக்கு சற்று முன் அழைத்து தான் செய்யப்போகும் பயங்கரம் பற்றி அறிவுறுத்தியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மகளும் மருமகனும் சம்பவ இடத்துக்கு விரைந்து எரிந்து கொண்டிருக்கும் காருக்குள் பாய முனைந்தனர். ஆனால் போலீஸ் அவர்களைப் போராடி தடுத்தனர்.

முன்னதாக போலீஸுடன் சேர்ந்து முதியவரின் மகளும், மருமகனும் காரைத் தேடி அலைந்தனர். ஆனால் கடைசியில் கண்டுபிடிக்கும் போது கார் எரிந்து கொண்டிருந்ததை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

மருமகனை தன் வீட்டை விட்டு வெளியேறுமாறு முதியவர் நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். தினமும் இரவு நேரங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையும் அருகில் இருந்தவர்கள் உறுதி செய்தனர்.

மருமகனை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய முதியவர் பெர்சாத், இல்லையெனில் மகனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் அண்டை வீட்டில் உள்ளவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவரது இந்த மிரட்டலை ஒருவரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. கார் எரிந்து போன இடத்தில் இருந்த தனியார் காவலர் ஒருவர் கார் ஒரு மணி நேரமாக அந்த வயல் பகுதியில் இருந்ததாகவும், பிறகு அது தீப்பற்றி எரிந்ததாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார்.

தீ அணைந்த பிறகு தாத்தா கையில் பேரனுடன் கருகிய உடல்களே காரில் இருந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x