Last Updated : 18 Mar, 2015 11:16 AM

 

Published : 18 Mar 2015 11:16 AM
Last Updated : 18 Mar 2015 11:16 AM

10 ஆண்டு சேவையை முடித்து ஜூன் மாதம் ராணுவத்திலிருந்து விலகுகிறார் பிரிட்டன் இளவரசர் ஹாரி

பிரிட்டன் ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அந்நாட்டு இளவரசர் ஹாரி, வரும் ஜூன் மாதம் ராணுவத்திலிருந்து விலகி புதிய வாழ்க்கையை தொடங்கப் போவதாக நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து ஹாரி மேலும் கூறும்போது, “ராணுவத்தில் இணைந்து மிகவும் சவாலான பணிகளைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

எனது பணிக் காலத்தில் பல சிறந்த மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த அனுபவம் எனது வாழ்நாள் முழுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக எனது நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன்” என்றார்.

இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளைய மகனான இளவரசர் ஹாரி (30), முடி சூட்டும் பட்டத்து இளவரசர் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு மே மாதம் ராணு வத்தில் பயிற்சி பெறுபவராக சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

அப்பாச்சே ரக போர் ஹெலி காப்டர் விமானியான இவர், அல்-காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட் டிருந்த அமெரிக்கா தலைமை யிலான நேட்டோ படையில் 2 முறை பங்கேற்றிருக்கிறார்.

ராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ராணுவத் துடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x