Published : 14 Mar 2015 08:14 PM
Last Updated : 14 Mar 2015 08:14 PM
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளை பரிந்துரை செய்வதற்கு சட்டவிரோதமாக கமிஷன் பெற்றதாக இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இல்லினாய்ஸ் மாநிலம், லெமான்ட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நீல் ஷர்மா (34). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷர்மா, அரசு உரிமம் பெற்ற மருத்துவர் ஆவார். இவர் இல்லினாய்ஸ் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தில் மருத்துவ இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை பரிந்துரை செய்து அனுப்புவதற்கு மருத்துவ நிறுவனம் ஒன்றிடம் 2,500 டாலர்கள் கமிஷன் பெற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார்.
ஷர்மா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் டாலர்கள் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT