Last Updated : 09 Mar, 2015 06:25 PM

 

Published : 09 Mar 2015 06:25 PM
Last Updated : 09 Mar 2015 06:25 PM

எகிப்தில் திறக்கப்பட்ட காஸா நுழைவில் குண்டுவெடிப்பு

எகிப்தில் காஸாவை இணைக்கும் ரஃபா அல் ரஷி சர்வதேச சாலையில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எகிப்தின் வடக்கு சினாயில் ரஃபா அல் ரஷி சர்வதேச சாலையில் முகமுடி அணிந்த சில நபர்கள் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். சரியாக ராணுவ வாகனம் செல்லும் தருணத்தில் இந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களின் நிலை மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எகிப்துக்கான காஸா எல்லைப் பகுதி சாலை சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நடத்தப்பட்டு இந்தத் தாக்குதலை அடுத்து, அந்தப் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மற்றும் வீடுகள் மீது எகிப்து ராணுவம் மீண்டும் குண்டு வீச தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x