Published : 20 Mar 2015 08:35 PM
Last Updated : 20 Mar 2015 08:35 PM
ஜப்பானில் பணியாற்றும் அமெரிக்க தூதர் ஜேக்குலின் கென்னடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மிட்ஸுயோஷி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் மகள் ஜேக்குலின் கென்னடி தற்போது ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு மர்ம நபர் ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார்.
கடந்த மாதம் அதே நபர் பேசியபோது, டோக்கியாவில் உள்ள அமெரிக்க தூரகத்தை குண்டுவைத்து தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜப்பான் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஒகினவா என்ற பகுதியைச் சேர்ந்த மிட்ஸுயோஷியை (52) கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமெரிக்க ராணுவம் ஜப்பானில் முகாமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தூதருக்கு எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒகினவா தீவில் கடந்த 1959-ல் அமெரிக்க கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. அங்கு தற்போது 47 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர். அந்த முகாமுக்கான செலவு முழுவதையும் ஜப்பான் அரசு ஏற்கிறது. இதற்கு அந்த நாட்டில் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மிட்ஸுயோஷியும் அமெரிக்க முகாமுக்கு எதிராக போராடி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT