Last Updated : 27 Mar, 2015 11:26 AM

 

Published : 27 Mar 2015 11:26 AM
Last Updated : 27 Mar 2015 11:26 AM

ஐ.நா.வில் நினைவிடம்: இந்தியா ரூ.1.5 கோடி நன்கொடை

மனித அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோர் நினைவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ரூ.1.57 கோடி நன்கொடை வழங்கியள்ளது.

‘ஆர்க் ஆப் ரிட்டர்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், ஐ.நா. பொது அவையின் தலைவர் சாம் குட்டிசா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

பல்வேறு ஐரோப்பிய நாடு களிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்களை அடிமைகளாக விற் பனை செய்யும் முறை நீண்டகால மாக இருந்து வந்தது. அப்போது சுமார் 400 ஆண்டுகளில் 1.5 கோடி கறுப்பின மக்கள் தங்கள் அடிப்படை மனித உரிமைகளை இழந்து அடிமைப்பட்டு கிடந்தனர்.

அப்போது மனிதர்கள் ஆடு, மாடுகளைவிட மோசமாக நடத்தப் பட்டனர். இதில் ஏராளமா னோர் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாகவும், அடிமை வணிக முறை ஒழிக்கப்பட்டதன் நினை வாகவும் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x