Published : 03 Feb 2015 12:15 PM
Last Updated : 03 Feb 2015 12:15 PM
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பள்ளிக்கூடம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கையெறி குண்டை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெஷாவர் தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சியில் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், சம்பவ இடத்தில் எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை மர்ம நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அது குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதியன்று பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர்.
இந்நிலையில், கராச்சியில் பள்ளிக்கூடம் மீது கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT