Last Updated : 03 Feb, 2015 10:21 AM

 

Published : 03 Feb 2015 10:21 AM
Last Updated : 03 Feb 2015 10:21 AM

இலங்கை முன்னாள் அமைச்சர் கைது

இலங்கை சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரியில் நடை பெற்ற அதிபர் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஆவணம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் போலியானது என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர் பாக கொழும்பில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை பிப்ரவரி 11-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x