Last Updated : 14 Feb, 2015 03:19 PM

 

Published : 14 Feb 2015 03:19 PM
Last Updated : 14 Feb 2015 03:19 PM

ஏமனில் தூதரகத்தை மூடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஏமனில் உள்ள தூதரகத்தை மூடுவதாக சனிக்கிழமையன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

ஏமன் தலைநகர் சானாவில் உள்ள ஐக்கிய அரபு தூதரகம் மூடப்பட்டு, அனைத்து தூதரகப் பணியாளர்களும் அங்கிருந்து காலிசெய்கின்றனர் என்று யு.ஏ.இ. தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் பதட்ட சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் அடிப்படையில் அரசியல் மாற்றம் நிகழ்வதை ஷியா ஹூத்திகள் தடுத்து வருவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏமனில் உள்ள அரசியல் தடைகளினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளும் சானாவில் உள்ள தங்கள் தூதரக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x