Last Updated : 02 Feb, 2015 04:48 PM

 

Published : 02 Feb 2015 04:48 PM
Last Updated : 02 Feb 2015 04:48 PM

இந்தியாவுடனான உறவில் முழு நம்பிக்கை: சீன அதிபர் ஜி ஜின்பிங் தகவல்

இந்திய சீன உறவில் எனக்கு முழு நம்பிக்கையிருக்கிறது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரி வித்துள்ளார். சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் இதனை அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கு 4 நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். மேலும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, ரஷ்ய வெளி யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் ஆகியோரையும் நேற்று சந்தித்தார்.

சுஷ்மாவை வரவேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: இந்திய சீன உறவில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். இப்புதிய ஆண்டில், இரு நாடுகளுக்கு இடை யேயான உறவில் வளர்ச்சி, புதிய செயல்திட்டங்கள் ஆகிய இலக்குகள் எட்டப்படும் என நம்பு கிறேன். கடந்த ஆண்டு செப்டம் பரில் எனது இந்தியப் பயணத் துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

உறவுகளை வலுப்படுத்தவும், பிரதமர் மோடி மற்றும் நான் இருவரும் மேற்கொண்ட ஒப்பந்தங் களை நிறைவேற்றவும் திடமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு அவருடன் சென்ற போது நிகழ்ந்தவைகள் பற்றிய இனிமையான நிகழ்வுகள் என்னிடம் உள்ளன. பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் எனது கனிவான வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “சீனாவில் புதிதாகப் பிறந்துள்ள ஆடு ஆண்டையொட்டி, பிரதமர் மோடி தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உங்களின் இந்திய வருகை புதுமை மற்றும் படைப்பாக்கத் திறனுடன் இணைந்தது. உங்களின் வருகை இந்திய மக்களுக்கு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த புதிய வழிகள் கண்டறியப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுஷ்மா, சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ உடன் எல்லைப் பிரச்சினை, சீன சந்தைகளை இந்தி யாவுக்காக திறந்து விடுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தொடர் ஆலோசனை நடத்தினார்.

இதுவரை மோடியும், ஜி ஜின்பிங்கும் 3 முறை சந்தித் துள்ளனர். விரைவில் மோடி மீண்டும் சீன சுற்றுப்பயணம் மேற் கொள்ளவுள்ளார். அப்போது, ஜி ஜின்பிங் அவரை, தனது சொந்த மாகாணமான சான்ஜியில் உள்ள ஜியானுக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x