Last Updated : 13 Jan, 2015 12:36 PM

 

Published : 13 Jan 2015 12:36 PM
Last Updated : 13 Jan 2015 12:36 PM

பாகிஸ்தானில் 7 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 7 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி, பைசலாபாத், ராவல்பிண்டி மற்றும் சுக்கூர் சிறைகளில் மொத்தம் 7 தீவிரவாதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக டான் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

பெஹ்ரம் கான், ஷாஹித் ஹனீஃப், முகமது தல்ஹா, கலீல் அகமது, சுல்ஃபித்கர் அலி, முஸ்தக் அகமது மற்றும் நாவாஷ் அலி ஆகியோர் மரண தண்டனை ப் பெற்ற தீவிரவாதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவர் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாததுக்கு எதிரான நடவடிகையாக மீண்டும் மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

மரண தண்டனை மீண்டும் கொண்டு வந்த பிறகு பாகிஸ்தானில் கடந்த மாதம் டிசம்பர் மாதம் முதல் மொத்தம் 17 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x