Last Updated : 24 Jan, 2015 12:37 PM

 

Published : 24 Jan 2015 12:37 PM
Last Updated : 24 Jan 2015 12:37 PM

இராக்கில் ஐ.எஸ். தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலி

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.

இராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள முக்தாதியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலியானதாக அல்- கேதார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் அலி அல்-அன்சாரி என்பவரும் மற்றுமொருவரும் பலியானதாகவும், அஹமீத் மற்றும் குஸே ஷஹீப் என்ற இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x