Last Updated : 22 Jan, 2015 12:30 PM

 

Published : 22 Jan 2015 12:30 PM
Last Updated : 22 Jan 2015 12:30 PM

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் ஏமன் அதிபர் மாளிகை: ராணுவ நடவடிக்கை தீவிரம்

ஏமன் அதிபர் மன்சூர் ஹதியின் மாளிகையை அந்நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்துள்ளனர். பிணைக் கைதியாக அதிபர் சிக்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஏமனில் சன்னிப் பிரிவு தலைமையிலான ஆட்சியை எதிர்த்து வரும் அந்நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவில் இருக்கும் அதிபர் மாளிகையை வியாழனன்று சிறைப்பிடித்தனர்.

அதிபர் மாளிகையின் பாதுகாப்பு வீரர்களை விரட்டிய அவர்கள் தங்களது படை வீரர்களைச் சுற்றி நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டின் அதிபர் மன்சூர் ஹதி கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ளார்.

இதனால், அந்நாட்டு ராணுவத்துக்கு அவசர நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x