Published : 20 Dec 2014 11:28 AM
Last Updated : 20 Dec 2014 11:28 AM
மார்ச் மாதம் நெருங்கி வரும் நேரத்தில் வரி விலக்குக்காக இரண்டு நிதித்திட்டங்களை (பண்ட்) சுந்தரம் மியூச்சுவல் பண்ட் வெளியிட்டிருக்கிறது. சுந்தரம் லாங் டேர்ம் டாக்ஸ் அட்வாண்டேஜ் (சீரிஸ் 1) மற்றும் சுந்தரம் டாப் 100 (சீரிஸ் 4) ஆகிய பண்ட்களை வெளியிட்டது சுந்தரம் மியூச்சுவல் பண்ட்.
இந்த இரண்டு பண்ட்களும் குளோஸ் எண்டட் பிரிவை சேர்ந்தவை. இந்த இரண்டு பண்ட்களில் டிசம்பர் 18-ம் தேதி முதல் முதலீடு செய்யலாம். சுந்தரம் டாப் 100 பண்ட் வரும் ஜனவரி 16-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இது மூன்று வருட முதலீட்டு காலம் கொண்டது. இடையில் முதலீட்டை வெளியே எடுக்க முடியாது. இன்னொரு பண்ட் 10 வருட லாக் இன் காலம் கொண்டது. இந்த பண்டில் வரும் மார்ச் மாதம் 20-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
பண்ட்களை வெளியிட்டு பேசிய சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹர்ஷா விஜி, ‘இப்போது 22,000 கோடி ரூபாயைக் கையாளுகிறோம். நடப்பு நிதி ஆண்டுக்குள் இது 25,000 கோடி ரூபாயாக உயரும். அதேபோல இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் 40,000 கோடி ரூபாயை கையாளுவது எங்களது இலக்கு’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT