Published : 22 Dec 2014 08:49 AM
Last Updated : 22 Dec 2014 08:49 AM
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொலை செய்யும் நோக்கில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.
பெஷாவரில் உள்ள பள்ளி யொன்றில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 148 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் தங்கள் அமைப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக 148 பேரை கொன்றதாக தெஹ்ரிக் இ தலிபான் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை ஓயப் போவதில்லை என்று அறிவித்த பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்நாட்டில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அறிவித்தார்.
2 பேருக்கு தூக்கு
இதையடுத்து, தீவிரவாதிகள் அக்கீல் என்ற உஸ்மானுக்கும், அர்ஷத் மெஹ்மூத் என்ற மெஹர் பன்னுக்கும் பைசலாபாத் சிறை வளாகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ராணுவத் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் உஸ்மானும், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல முயன்றது தொடர்பான வழக்கில் மெஹர்பன்னும் தூக்குத் தண்டனை பெற்றிருந்தனர்.
இவர்களைத் தவிர மேலும் 15 தீவிரவாதிகள் தூக்குத் தண் டனையை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் 4 பேர்
இந்நிலையில், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஜுபேர் அகமது, ரஷீத் குரேஷி, குலாம் சர்வார் பட்டி, ரஷ்ய நாட்டவர் அக்லாக் அகமது ஆகியோருக்கு பைசலாபாத் சிறை வளாகத்தில் நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தண்டனையை நிறைவேற்று வதற்கு முன்பு கைதிகளை அவர்களது குடும்பத்தினர் கடைசியாக சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பைசலாபாத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாளை 2 பேருக்கு தூக்கு
அதே போன்று, கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி கள் அத்தவுல்லா என்ற காசிம், முகமது ஆஸம் என்ற ஷெரிப் ஆகியோருக்கு நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கள் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதத் தாக்கு தலில் தொடர்புடையவர்கள்.
300 பேர் கைது
தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்லாமாபாத் முழுவதும் தேடு தல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் கள் குழு, அதிரடிப்படையினர் இணைந்து மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என டான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தங்கியிருக்க லாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆப்கன் நாட்டினரின் குடியிருப்புகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ் லாமாபாத்தில் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டினர் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT