Last Updated : 26 Dec, 2014 10:58 AM

 

Published : 26 Dec 2014 10:58 AM
Last Updated : 26 Dec 2014 10:58 AM

விமானத்தை வீழ்த்தி விமானியை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்

சிரியாவில் ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐஎஸ் தீவிரவாதிகள் அதில் இருந்த பைலட்டை சிறைபிடித்தனர். இராக், சிரியாவில் அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஜோர்டானும் இணைந்துள்ளது.

அந்நாட்டு போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் வடகிழக்கு சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு விமானி மட்டும் இருந்துள்ளார். மோசமான வானிலை காரணமாக விமானம் தாழ்வாக பறந்தபோது ஐஎஸ் தீவிரவாதிகள் அதனை சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த விமானியையும் பிணைக் கைதியாக்கியுள்ளனர்.

இராக், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் தாக்குதலில் இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அந்த விமானியை தீவிரவாதிகள் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x