Last Updated : 07 Dec, 2014 10:29 AM

 

Published : 07 Dec 2014 10:29 AM
Last Updated : 07 Dec 2014 10:29 AM

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 12

ஜெருசலேம் நகர் இஸ்ரேலின் ஒரு பகுதி யாகவே உள்ளது. என்றாலும் 1967க்கு முன்பாகவே அந்தப் பகுதியில் தங்கிவிட்ட அரேபியர்கள் இன்னமும் அங்கு தொடர்கிறார்கள். இப்படி இஸ்ரேலியக் குடியுரிமையை அனுபவித்துக் கொண்டிருப் பவர்கள் சுமார் 17 லட்சம் பேர்.

இவர்களுக்குதான் சமீபகாலமாக சோதனை. கட்டடங்கள் எழும்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகக்கூறி ஜெருச லேம் நகரில் பல கட்டடங்கள் இடிக்கப்படு கின்றன. அவையெல்லாமே இஸ்ரேலில் தங்கிவிட்ட பாலஸ்தீனியர்களின் வீடு களாகவே உள்ளன.

இதனால் கோபமடைந்த ‘இஸ்ரேலிய முஸ் லிம்கள்’ கற்களை எறிந்தும், பட்டாசுகளை வீசியும் அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். இஸ்ரேல் அரசோ ஸ்டென் கன்னை அவர்களை நோக்கித் திருப்பியபடி பயமுறுத்திக் கொண்டிருக் கிறது. மேற்குக் கரை, காஸா ஆகிய இரண்டுமே தன்னுடையது என்கிறது பாலஸ் தீனம். ஆனால் இரண்டுமே இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்ட இடங்களாகவும் இருந்துள் ளன. 2005-ல்தான் இஸ்ரேல் காஸாவிலிருந்து வெளியேறியது. 2007-ல் ஹமாஸ் குழுவின் கையில் காஸா சென்று விட்டது.

கல்வியறிவு மிக அதிகம் கொண்ட நாடாக (90 சதவீதத்திற்கும் அதிகம்) இஸ்ரேல் இருக்க, பாலஸ்தீனம் இதில் பின்னடைவில் உள்ளது. நாலாபுறமும் பகை நாடுகளென்ப தால் இஸ்ரேலுக்கு பலத்த ராணுவம் தேவைப் படுகிறது. பதினெட்டு வயதான எல்லோரும் (திருமணமான பெண்களைத் தவிர) ராணு வத்தில் சேருவது கட்டாயம். ஆணாக இருந் தால் குறைந்தபட்சம் மூன்று வருடங்களும், பெண்னென்றால் இரண்டு வருடங்களும் ராணுவப் பணியைத் தொடர வேண்டும்.

சராசரி மனிதனின் ஆயுள் உலகிலேயே மிக அதிகம் இஸ்ரேலில்தான் (!) என்கிறார்கள். அற்புதமான மருத்துவமனைகளும், சிகிச்சை முறைகளும் முக்கிய காரணம்.

1950 ‘மறுபிரவேச சட்டம்’ ஒன்றைக் கொண்டு வந்தது அரசு. இதன்படி உலகின் எந்த மூலையில் இருக்கும் யூதரும் இஸ்ரே லில் வந்து தங்கிக் குடியுரிமை பெறலாம். ஆனால் 1970ல் ஒரு சட்டத் திருத்தம். இதன் படி யூத ரத்தம் அம்மா வழியில் வந்திருக்க வேண்டும். தவிர அவர் யூத மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியிருக்கக் கூடாது என் பது இப்போதைய கூடுதல் நிபந்தனைகள்.

பாராளுமன்றம் ‘நெஸ்ஸெட்’ என்று அழைக்கப்படுகிறது. மக்களே நேரடியாகப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நெதென்யாகுவைப் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தாலும், நாடாளுமன்றத்தில் அவரது லிகுட் கட்சிக்கான இடங்கள் முன்பைவிட குறைந்துவிட்டன. அதே சமயம் ராபின், பெரெஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்த தொழிலாளர் கட்சிக்கும் கணிசமான நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கவில்லை. பல்வேறு உதிரிக் கட்சிகளுக்கு நிறைய சீட்கள். இவற்றில் பெரும்பான்மையானவை தீவிரவாதிக் கட்சிகள் என்பது பயமுறுத்தும் உண்மை.

இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீதான பிடியை இறுக்குகிறது. தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் ஐந்து வருடங்களுக்குமேல் அங்கு தங்காவிட்டால் அவர்களுக்கான குடியுரிமையை இழந்துவிடுவார்கள் என்று சட்டம் இயற்றியிருக்கிறது. இப்படிக் குடியுரிமையை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 14,000.

ஓரிரு மாதங்களுக்குமுன் பாலஸ்தீனியர் களின் கூட்டத்தில் பங்கேற்ற பாலஸ்தீன அதி பர் முகம்மது அப்பாஸ், ‘’ஜெருசலேம் நகரில் உள்ள நமது ஆலயத்துக்குள் எந்த யூதரும் நுழையக் கூடாது. எப்படியும் இது தடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறியது வன்முறைக்கு உரமிடுவதாக அமைந்துள்ளது.

தங்கள் மனஉளைச்சலை பாலஸ்தீனர்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

‘’அப்பாஸ் போன்றவர்களும், ஹமாஸ் இயக்கத்தினரும் நாட்டில் வன்முறைகளைத் தூண்டி விடுகிறார்கள்’’ என்கிறது இஸ்ரேலிய அரசு. ‘’தெருக்களில் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீன அமைப்புகளால் வன்முறை தூண்டப்படுகிறது’’ என்கிறார் அதன் பிரதமர்.

‘’அமைதிக்காக நாங்கள் பாடுபடும்போது ஓரிரு வாக்கியங்கள் மூலம் ஹமாஸ் அதை மொத்தமாகச் சிதைத்து விடுகிறது’’ என்கிறார் அப்பாஸ்.

ஹமாஸ் இயக்கத்தினர் அப்பாஸை ‘பொய் கூறுபவர், கோழை’ என்று ஏசுகிறார்கள். யாசர் அராபத் மட்டும் இப்போது இருந்திருந்தால் பாலஸ்தீனம் பிளவுபட்டிருக்காது என்கிறார்கள் இப்போது!

என்னதான் தீர்வு?

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே நாடாக ஆகவேண்டும் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். ஆனால் இதை இஸ்ரேல் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது. அந்தநாட்டின் பெயர் என்ன என்பதிலிருந்து இன்னொரு ஹிட்லர் ராஜ்யம் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதுவரை இஸ்ரேல் எழுப்பக்கூடிய பல கேள்விகளுக்கான பதில்கள் சங்கடம் அளிக்கக் கூடியவை.

மற்றொரு தீர்வை 2013 நவம்பரில் ஐ.நா. அறிவித்தது. 1967க்கு முந்தைய எல்லைகளை பாலஸ்தீனமும், இஸ்ரேலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரு நாடுகளும் அங்கீகரிக்கப்படும். 165 நாடுகள் இதை ஏற் றுக்கொள்ள 6 நாடுகள் எதிர்த்து வாக்களித் தன. அந்த ஆறு நாடுகள் இஸ்ரேல், கனடா, அமெரிக்கா, மைக்ரோனேஷியா, மார்ஷல் தீவுகள். பலாவு. 165 நாடுகள் ஆதரித்தாலும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவுக்கும் உண்டே. தவிர ஜெருசேலம் என்னவாகும்? ஆக தொடங்கிய நிலையிலேயே இருக்கிறது பிரச்னை.

மும்மதங்கள் சங்கமித்த ஜெருசலேம் அந்த மதங்களின் முக்கிய போதனையான சகிப்புத் தன்மை மற்றும் சக உயிர்களிடம் அன்பு என்பதைக் காற்றில் பறக்கவிட்டதன் பலனாக நிம்மதி இழந்து தவிக்கின்றது.

(அடுத்ததாக ஒரு ‘புதிய’ நாடு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x