Published : 30 Dec 2014 01:22 PM
Last Updated : 30 Dec 2014 01:22 PM

ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இணை ரயில்கள் காலதாமதமாக வருவதல், இன்று புறப்படவேண்டிய சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மற்றும் சென்ட்ரல் – புதுடெல்லி தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலும் தாமதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "வண்டி எண்.12615 சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (30.12.2014) இரவு 07.15 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (31.12.2014) மாலை 15.00 மணிக்கு புறப்படும் இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண்.12621 சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (30.12.2014) இரவு 10.00 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (31.12.2014) அதிகாலை 03.00 மணிக்கு புறப்படும் இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x