Last Updated : 27 Nov, 2014 09:38 AM

 

Published : 27 Nov 2014 09:38 AM
Last Updated : 27 Nov 2014 09:38 AM

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்குக்கு 26 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தானில் ஜியோ டி.வி. எனும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. இதில் கடந்த மே மாதம், நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் ஆகியோர் நடித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வது போன்ற ஒரு காட்சியின்போது, இஸ்லாம் மத பாட்டு ஒன்று பின்னணியில் ஒளிபரப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு உள்ள மத அடிப்படைவாதிகள் பலரும் இந்நிகழ்ச்சி எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் நீதிமன்றங்களில் மனுக்களும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது அவர்கள் மதத்தை அவமதித்து விட்டதாகக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் மிர் ஷகில் உர் ரஹ்மான், நடிகை வீணா மாலிக், பஷீர் மற்றும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷைஸ்டா வாகிதி ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் சுமார் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி எதிர்ப்பு வந்தவுடன், அந்த தொலைக்காட்சி நிறுவனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x