Published : 13 Jul 2019 11:28 AM
Last Updated : 13 Jul 2019 11:28 AM
நேபாளத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் சார்பில், ”நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் தலை நகர் காத்மாண்டு பகுதியில் உள்ள முல்பானி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியாகினர். 6 பேர் மாயமாகினர். மேலும் நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன ” என்று தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் ,மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT