Published : 17 Aug 2017 02:04 PM
Last Updated : 17 Aug 2017 02:04 PM
டென்மார்க் நாட்டில் உள்ள 3எஃப்.எம். என்ற வானொலி நிலையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மர்ம நபர் கத்தி முனையில் மடக்கிப் பிடித்து மிரட்டி வருகிறார்.
இத்தகவலை டென்மார்க் செய்தி நிறுவனங்களான என்ஓஎஸ், ஏஎன்பி ஆகியன உறுதி செய்துள்ளன.
இது குறித்து ஏஎன்பி செய்தி நிறுவனம், "வானொலி நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த ஊழியரை கத்தி முனையில் மடக்கிப் பிடித்த மர்ம நபர் அந்தப் பெண்ணை மிரட்டி வானொலி நிலையத்துக்குள் நுழைந்தார். அந்த நபரைத் தொடர்பு கொண்டு சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளது.
பெண்ணை மர்ம நபர் மிரட்டி வரும் நிலையிலும் வானொலியில் ஒலிபரப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸார் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT