Last Updated : 21 Aug, 2017 05:53 PM

 

Published : 21 Aug 2017 05:53 PM
Last Updated : 21 Aug 2017 05:53 PM

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்

அமெரிக்க போர் கப்பல் ஒன்று சிங்கப்பூரில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 மாலுமிகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறும்போது, “அமெரிக்காவின் போர் கப்பலான ஜான் மெக்கெயின் அல்னிக் எம் சி என்ற எண்ணெய் கப்பலுடன் இன்று (திங்கட்கிழமை) காலை 5.24 மணியளவில் சிங்கப்பூர் கடற்கரையில் விபத்துக்குள்ளானது. இதில் அமெரிக்க போர் கப்பலிருந்த 10 மாலுமிகள் காணாமல் போயினர். 5 பேர் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

அல்னிக் எம் சி எண்ணெய்க் கப்பல் சுமார் 12,000 டன் எண்ணெய் ஏற்றிக்கொண்டு தைவானில் இருந்து சிங்கப்பூர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x