Published : 27 Jul 2017 09:34 AM
Last Updated : 27 Jul 2017 09:34 AM
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 3 நாள் பயணமாக மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். தலைநகர் மாலியில் அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூமை நவாஸ் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது நவாஸ் ஷெரீப் கூறும்போது, “சார்க் அமைப்பின் 19-வது மாநாடு இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்ததால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் சார்க் அமைப்பை சீர்குலைக்க இந்தியா முயற்சிக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT