Published : 24 Aug 2016 09:27 AM
Last Updated : 24 Aug 2016 09:27 AM
இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் கூறியதாவது:
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இரு நாடுகளிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் கலவரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய அரசுக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், காஷ்மீர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீர், எல்லை தாண்டிய தீவிர வாதம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அமைதிப் பேச்சை தொடங்க வேண்டும் என்று அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT