Last Updated : 12 Feb, 2017 03:08 PM

 

Published : 12 Feb 2017 03:08 PM
Last Updated : 12 Feb 2017 03:08 PM

கனடாவில் அதிசயம்: தீ விபத்திலிருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிய பூனை

கனடாவில் தீவிபத்திலிருந்து குடும்பத்தினரைக் காப்பாற்றியுள்ளது அதிசய பூனை ஒன்று.

கனடா, கிளேர்மவுண்ட், அல்பெர்ட்டாவில் வீடு ஒன்றில் தீப்பிடித்தது. அப்போது பூனை உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் அம்மாவை கடித்து எழுப்பியது, அதாவது தீப்பிடித்துள்ளதை அறிந்தே பூனை வீட்டம்மாவை கடித்துள்ளதாக சிபிசி நியூஸ் சானலில் செய்தி ஒளிபரப்பாகியது.

“வீட்டில் தீப்பிடித்ததை அறிந்த அந்தப் பூனை உறங்கிக்கொண்டிருந்த வீட்டம்மாவை கையில் நன்றாகக் கடித்து எழுப்பிவிட்டது. அப்போதுதான் அவருக்கு வீடு தீயின் பிடியில் இருப்பது தெரியவந்தது என்று” சிபிசி நியூஸ் செய்தி கூறுகிறது.

பிறகு தீயணைப்புப் படையினர் வந்து வீட்டிலிருந்து மேலும் ஒரு பூனை உட்பட அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்தனர், குறித்த நேரத்தில் பூனை எழுப்பியதால் வீடும் பெரிய அளவுக்கு சேதம் இல்லாமல் தப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x