Published : 17 Mar 2017 10:09 AM
Last Updated : 17 Mar 2017 10:09 AM

முஸ்லிம் நாடுகளின் பயணிகள் விவகாரம் ட்ரம்பின் புதிய ஆணைக்கு தடை: ஹவாய் மாகாண நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய பயணத் தடைக்கு ஹவாய் மாகாண நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவியேற்றார். சில நாட்களிலேயே இராக், ஈரான், சிரியா, ஏமன், லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளின் பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு சியாட்டிலில் உள்ள மாகாண நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து பயணத் தடை ஆணையில் சில திருத்தங் கள் செய்து அதிபர் ட்ரம்ப் அண் மையில் புதிய ஆணையை வெளியிட்டார். அதில் இராக் மட்டும் நீக்கப்பட்டது. இதர 6 முஸ்லிம் நாடுகளின் பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழையக் கூடாது என்று புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆணை கடந்த 15-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ட்ரம்பின் புதிய ஆணையை எதிர்த்து 12-க்கும் மேற் பட்ட மாகாண அரசுகள் அந்தந்த மாகாண நீதிமன்றங்களில் வழக்கு களைத் தொடர்ந்தன. இதில் ஹவாய் மாகாண நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி டெரிக் வாட்சன் நேற்று விசாரித்தார்.

‘அதிபர் ட்ரம்பின் தடையாணை யால் சுற்றுலா தொழில் பாதிக்கப் படும். 6 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் வாழும் தங்கள் உறவினர்களைச் சந்திக்க முடியாமல் போகும்’ என்று மாகாண அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி டெரிக் வாட்சன், அதிபர் ட்ரம்பின் புதிய பயணத் தடைக்கு தற்காலிக தடை விதித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறியபோது, மாகாண நீதிமன்றத்தின் உத்தர வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக் கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x