Published : 21 Nov 2014 12:26 PM
Last Updated : 21 Nov 2014 12:26 PM
இன்று காலை வர்த்தக தொடக்கத்திலிருந்தே நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 8,461.65 புள்ளிகளாக புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 28,254.85 புள்ளிகளாக இருந்தது.
மும்பை பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தால் நிஃப்டி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் ஓர் புதிய உச்சத்தை எட்டியது.
ஆசிய பங்குசந்தைகளில் ஏற்ற இறக்கமான நிலை நீடித்திருந்தாலும் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கி உள்ளதால் பங்குசந்தைகளில் ஏற்றம் காலை முதலே தொடர்கின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 187.29 புள்ளிகள் உயர்ந்து 28,254.85 ஆகவும், தேசிய பங்குசந்தையான நிஃப்டி 59.75 புள்ளிகள் உயர்ந்து 8,461.65 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
பின்னர் இதே நிலையில் தொடர்ந்து பகலில் சென்செக்ஸ் 230.97 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 28,298.53 ஆகவும், நிஃப்டி 71.60 புள்ளிகள் உயர்ந்து 8,473.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT