Published : 23 Jun 2016 08:39 AM
Last Updated : 23 Jun 2016 08:39 AM

பாகிஸ்தானில் பாடகர் அம்ஜத் சாப்ரி சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் புகழ்பெற்ற கவாலி பாடகர் அம்ஜத் சாப்ரி (45) மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

கராச்சி நகரில் உள்ள லிக்வதா பாத் 10 பகுதியில் சாப்ரியும் அவரது உதவியாளரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் சாப்ரியின் காரை நோக்கி துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.

இதில் சாப்ரியின் மார்பு மற்றும் நெற்றியில் குண்டுகள் பாய்ந்தன. அவரது உதவியாளரும் படுகாய மடைந்தார். இதையடுத்து இரு வரும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x