Last Updated : 12 Jun, 2017 12:45 PM

 

Published : 12 Jun 2017 12:45 PM
Last Updated : 12 Jun 2017 12:45 PM

கத்தார் மீது எந்த நம்பிக்கையும் இல்லை: ஐக்கிய அரபு அமீரகம்

கத்தார் மீது வைத்திருந்த நம்பிக்கையை வளைகுடா நாடுகள் இழந்துவிட்டன என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவை துண்டித்துள்ளன.

இதனால் பொருளாதார ரீதியாக கத்தார் பெரும் பின்னடைவை சந்திந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து ரஷ்யாவுக்கான ஐக்கிய அரபு அமீரகம் தூதர் ஒமர் சைஃப் கோபாஸ் கூறும்போது, "கத்தார் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அந்நாட்டின் மீது வைத்திருந்த நம்பிக்கை எப்போதோ போய்விட்டது.

கத்தாருடன் நீண்ட காலமாக தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்துமாறு பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம். இப்போது அப்பேச்சு வார்த்தையின் இறுதி நிலையை நாங்கள் கடந்து விட்டோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x