Published : 02 Jul 2016 10:43 AM
Last Updated : 02 Jul 2016 10:43 AM
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடக்கவுள்ளது. வாக்குரிமை பெற்றுள்ள 1.5 கோடி பேர் வாக்களிக்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட தள்ளாட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 4 பிரத மர்கள் பதவி வகித்து விட்டனர். ஆளும் சுதந்திர தேசிய கூட்ட ணியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கடந்த ஆண்டு டோனி அப்பாட் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்றுக் கொண்டார். அரசியல் குழப்பங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு சபை களையும் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தும்படி பிரதமர் மால்கம் டர்ன்புல் பரிந்துரைத்தார்.
அதன் அடிப்படையில் நாடாளு மன்றம் கலைக்கப்பட்டு, ஜூலை 2-ம் தேதிக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கீழ் சபையின் 150 உறுப்பினர்கள் உட்பட 226 உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்காக மொத்தம் 55 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,600 வேட்பா ளர்கள் களத்தில் குதித்துள்ளனர். சுமார் 1.5 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 7,000 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் ஆளும் சுதந்திர தேசிய கூட்டணியின் வேட்பாளரும், பிரதமருமான மால்கம் டர்ன்புல்லுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலா ளர் கட்சியின் வேட்பாளர் பில் ஷார்டனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT