Last Updated : 25 May, 2017 05:28 PM

 

Published : 25 May 2017 05:28 PM
Last Updated : 25 May 2017 05:28 PM

இங்கிலாந்து மான்செஸ்டர் கல்லூரிக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள்

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் ட்ரஃபோர்ட் கல்லூரியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து வெடிகுண்டு சிறப்பு நிபுணர்கள் அங்கு விரைந்தனர்.

இதுகுறித்து இங்கிலாந்து போலீஸார் தரப்பில், "இங்கிலாந்து மான்செஸ்டர் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து லண்டன் போலீஸார் அங்கு விரைந்தனர். இது குறித்து கூடுதல் தகவலை தற்போது கூற முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார் அங்கு சந்தேகத்துக்கு இடமான பொருளை கைப்பற்றியுள்ளதாகவும், தற்போது அந்தப் பகுதி பாதுகாப்பாக உள்ளதாகவும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லண்டன் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x