Published : 23 Aug 2016 09:19 AM
Last Updated : 23 Aug 2016 09:19 AM
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த பலுசிஸ்தான் தேசிய இயக்க தலைவர்கள் மூன்று பேர் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில், “பலுசிஸ்தான், கில்கிட் பல்டிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் மக்கள் கடந்த சில நாட்களாக தனக்கு நன்றி தெரிவித்து வருவதாக” கூறினார். மேலும், பலுசிஸ்தானின் பாகிஸ்தான் அடக்குமுறையைக் கையாள்வதாகக் குற்றம்சாட்டி னார். காஷ்மீர் பிரச்சினையைத் திசை திருப்பவும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவும் இவ்வாறு மோடி பேசியதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு பலுசிஸ்தான் தேசிய இயக்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த பலுசிஸ்தான் தலைவர்கள் மீது பலுசிஸ்தானின் குஸ்தான் பகுதியில் உள்ள ஐந்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் 120, 121, 123, 353 உள்ளிட்ட பிரிவுகளில், பிரஹம்தக் புக்டி, ஹர்பியார் மாரி, பானுக் கரிமா பலூச் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுத்தல், தண்டனைக்குரிய, சிறையில் அடைக்கத்தக்க குற்றம் செய்தல், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்துத் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.
“பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமாகச் செயல்படும்படி பலூச் தலைவர்கள் இந்தியப் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள் ளனர்” என புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பலுசிஸ்தானின் சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
பலுசிஸ்தான் முதல்வர் சனவுல்லா ஜெஹ்ரி கூறும்போது, “பலுசிஸ்தானில் ஊடுருவலுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. பிரஹம்தக் புக்டி, ஹர்பியார் மாரி, ஸம்ரான் மாரி, அல்லா நாசர் போன்ற பிரிவினைவாதிகளுக்கு இந்திய அரசு நிதியுதவி அளிக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT