Last Updated : 16 Mar, 2017 10:46 AM

 

Published : 16 Mar 2017 10:46 AM
Last Updated : 16 Mar 2017 10:46 AM

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் - பல்டிஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் முடிவு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியி லுள்ள கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிக்கு தனி மாகாண அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானில் 4 மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் 5-வது மாகாணமாக கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் மாகாண ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் ரியாஸ் ஹுசேன் பிர்ஸதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிக்கு மாகாண அந்தஸ்து வழங்கும்படி வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மாகாண அந்தஸ்து வழங்குவதற்காக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த வழியாகத் தான் பல கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சீனா பாகிஸ்தான் இடையிலான பொரு ளாதார கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன’’ என்றார்.

கில்ஜித் பல்டிஸ்தானை பாகிஸ்தான் இதுவரை தனி பகுதி யாகவே பராமரித்து வந்தது. எனினும் அங்கு பிராந்திய சட்டப் பேரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும் உள்ளார்.

காஷ்மீரின் அங்கமாகவே கில்ஜித் பல்டிஸ்தானை இந்தியா பார்த்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது இப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது. எனினும் 1994-ல் கில்ஜித் பல்டிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு அங்கம் என நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில் கில்ஜித் பல்டிஸ்தானுக்கு பாகிஸ்தான் தனி மாகாண அந்தஸ்து வழங் கினால், அது இரு நாட்டுக்கும் இடையே பிரச்சினையை அதிகப் படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x