Last Updated : 10 Oct, 2014 06:45 PM

 

Published : 10 Oct 2014 06:45 PM
Last Updated : 10 Oct 2014 06:45 PM

2 மருத்துவர்கள் உட்பட 6 பெண்களை படுகொலை செய்தது ஐ.எஸ்.

இராக்கின் மொசூல் நகரில் 2 மருத்துவர்கள் உட்பட 6 பெண்களை அங்கு ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் . படுகொலை செய்துள்ளது.

இராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூலின் பல பகுதிகளை ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த நகரைச் சேர்ந்த மருத்துவர்களான மஹா சுபென், லமாய இஸ்மாயில் உள்ளிட்ட 6 பெண்களின் உடல்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

ஐ.எஸ். அமைப்பின் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் உடல்கள் இருந்தன. பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல்கள் மொசூலின் தடயவியல் மருத்துவ மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x