Published : 27 Jan 2017 11:16 AM
Last Updated : 27 Jan 2017 11:16 AM
கம்போடியாவில் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர் டெப் வேன்னி 2011-ல் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டார்.
சுற்றுலாப் பகுதியான பெனாம் பென்னில் உள்ள போயங்க் காக் ஏரிp பகுதியைத் தனியாருக்கு விற்கும் முயற்சியில் இறங்கிய அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் அது. தொடர்ந்து விசாரணைக் கைதியாகவே சிறையில் வைக்கப்பட்டிருந்தார் டெப்.
வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஜாமீன் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை விடுவிக்கக் கோரி புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்… (மேலேயுள்ள படத்தில்)
படம்:ராய்ட்டர்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT