Last Updated : 24 Mar, 2017 03:47 PM

 

Published : 24 Mar 2017 03:47 PM
Last Updated : 24 Mar 2017 03:47 PM

ரஷ்யாவின் செச்சென் பகுதியில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதிகள் 6 பேர் பலி

ரஷ்யாவில் செச்சென் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேரும் பலியாகினர்.

இதுகுறித்து தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) அளித்த அறிக்கையில், "ரஷ்யாவின் செச்சென் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரிலும் 6 பேர் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பிரிவினை தீவிரவாதிகளுக்கு எதிராக புதின் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x