Published : 04 Oct 2014 09:42 AM
Last Updated : 04 Oct 2014 09:42 AM

தூய்மையான இந்தியா பிரச்சாரம்: பிரதமர் வீட்டருகே சாக்கடையை சுத்தம் செய்த கேஜ்ரிவால்

பிரதமர் நரேந்தர மோடி அறிவித்த ‘தூய்மையான இந்தியா’ பிரச்சாரத்தை அவரது வீட்டருகே இருக்கும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால்.

காந்தி ஜெயந்தி நாளன்று நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட தூய்மையான இந்தியா பிரச்சாரத்தில் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார். இதற்காக அவர்,

ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அரசு இல்லம் அருகே இருக்கும் பி.ஆர்.கேம்ப் எனும் சேரிப்பகுதியில் அடைப்பில் சிக்கியிருந்த சாக்கடை

கால்வாய்களை சுத்தம் செய்தார். இவருடன் அங்கு பணியில் இருந்த துப்புரவு பணியாளர்களும் சுத்தம் செய்வதில் ஈடுபட்டனர்.

முன்னதாக கேஜ்ரிவால், துப்புரவு பணியாளர்களுடன் அந்தப் பகுதியிலேயே அமர்ந்து சிற்றுண்டி உண்டார். கேஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபை

உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x