Last Updated : 17 Oct, 2014 07:52 PM

 

Published : 17 Oct 2014 07:52 PM
Last Updated : 17 Oct 2014 07:52 PM

சிறையிலிருந்து ஜெயலலிதா நாளை (சனிக்கிழமை) விடுவிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து ஜெயலலிதா நாளை (சனிக்கிழமை) பெங்களூர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா விடுவிக்கப்படுகிறார், ஆனால் நாளை விடுவிக்கப்படுகிறார். சிறையிலிருந்து அவரை விடுவிப்பதற்கான சட்ட நடைமுறைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.

உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்த பிறகு நாங்கள் சிறப்பு நீதிமன்றத்தை அணுகி பிணை உத்திரவாதங்களை அளித்து அவரை விடுவிக்க ஆவன செய்யவுள்ளோம்” என்றார்.

சிறைத்துறை டிஐஜி ஜெய்சிம்மாவும் “நாளை நிச்சயம் விடுவிக்கப்படுவார்” என்று கூறினார்.

செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x