Last Updated : 30 Oct, 2014 12:10 PM

 

Published : 30 Oct 2014 12:10 PM
Last Updated : 30 Oct 2014 12:10 PM

குர்து இன பள்ளி மாணவர்கள் 25 பேரை விடுவித்தது ஐ.எஸ்.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பால் கடத்தப்பட்ட 25 குர்து இன பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஐ.நா. கண்கானிப்பு குழு தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த மே மாதம் ஐ.எஸ். அமைப்பால் கடத்தப்பட்ட 150 பள்ளி மாணவர்களுள் 25 பேர் விடுவிக்கப்பட்டதாக அங்கிருக்கும் ஐ.நா. கண்கானிப்பு குழு தெரிவித்துள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

குர்து இன மக்களை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் அலீபோ நகரை வசப்படுத்திய ஐ.எஸ். அமைப்பு அங்கு மாணவர்கள் பலரை கடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x