Published : 28 Jun 2019 02:52 PM
Last Updated : 28 Jun 2019 02:52 PM
பிரான்ஸ் நாடு வரலாறு காணாத அனல் காற்றை சந்தித்து வருவதால் அந்நாட்டு அரசு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
பருவநிலை நிலை மாற்றம் காரணமாக , உலக நாடுகள் தொடர்ந்து கால நிலை மாற்றத்துக்கு எதிரான பருவச் சூழல்களை சந்திந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரான்ஸ் மக்கள் வரலாறு காணாத அனல் காற்றை சந்தித்து வருகிறனர். வெள்ளிக்கிழமை மட்டும் அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருப்பதாக பிரான்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிரான்ஸ் சந்திக்காத வெப்பம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத அனல் காற்றை பிரான்ஸ் எதிர் கொண்டுள்ளதால் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
மேலும் அவசர அழைப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக பிரான்ஸ் இம்மாதிரியான பருவ நிலையை எதிர்க் கொண்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பருவ சூழலுக்கு தகுந்தாற்போல் நாம் வேலை செய்யும் முறை மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னாத கடந்த ஜப்பானும் வரலாறு காணாத அளவு அனல் காற்றை சந்தித்தது. இதில் 63 பேர் பலியானர். 20,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT