Published : 10 Sep 2018 08:12 AM
Last Updated : 10 Sep 2018 08:12 AM

பாகிஸ்தான் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி பதவியேற்பு

பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவர் இம்ரான் கான். கடந்த மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அய்தாஸ் அஹ் சான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் மவுலான பசல் ஆகி யோரைத் தோற்கடித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் ஆரிப் ஆல்வி வெற்றி கண்டார்.

இந்த நிலையில் இஸ்லாமா பாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆரிப் ஆல்வி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான், ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவித் பஜ்வா, அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரி கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பல் மருத்துவரான ஆரிப் ஆல்வி 1969-ல் மாணவர் இயக்கத் தில் சேர்ந்து பின்னர் முழு நேர அரசியல்வாதியானார்.லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுட்டனர். இதில் அவரது வலது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து பல் வேறு இயக்கங்களில் இருந்த ஆல்வி, இம்ரானுடன் நெருக் கமானார். இம்ரான் கட்சி தொடங் கியபோது கட்சியைப் பலப்படுத்த உதவியாக இருந்தார்.

2006 முதல் 2013 வரை கட்சியின் பொதுச் செயலராக பணியாற்றினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x