Published : 27 Sep 2018 01:16 PM
Last Updated : 27 Sep 2018 01:16 PM

ஆப்கன் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் பலி: ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு வெவ்வேறு வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 21 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், "ஆப்கானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கப்சியா மாகாணத்தின் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள். வார்டாக் மாகாணத்தில்  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். இதில் இறந்தவர்களின்  வயது 6 முதல் 12 வரை இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான்கள் அல்லது ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆறுமாதங்களில் ஆப்கனில் 62% வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த  நிலையில் வார்டாக் மாகாணத்தின் 8 ராணுவ வீரர்களை தலிபான்கள் கடத்தி சென்றுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிலுள்ள அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ” நாங்கள் தொடர்ந்து வார்டாக் மாகணத்திலுள்ள உள்ளூர் தலைவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x