Published : 09 Sep 2018 09:12 AM
Last Updated : 09 Sep 2018 09:12 AM
தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப் படும் என்று ஐ.நா. சபை அறிவித் துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அந்தப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐ.நா.வின் தபால் தலை நிர்வாகப் பிரிவு, தீபாவளி பண் டிகைக்காக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது. நியூயார்க்கில் (ஐ.நா. தலைமை அலுவலகம்) அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரு தாளில் 10 சிறப்பு தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். அந்தச் சிறப்பு தபால் தலையில் அகல்விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும். அதன் பின் னணியில் ஐ.நா. தலைமை அலுவலக கட்டிடமும் ‘மகிழ்ச்சி யான தீபாவளி’ வாழ்த்தும் இடம்பெறும்.
இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளிக்காக சிறப்பு தபால் தலை வெளியிடுவதை ஐ.நா.வுக்கு இந்தியாவின் நிரந்தரப் பிரதி நிதி தூதர் சயத் அக்பருதீன் வரவேற்றுள்ளார். ‘தீபாவளிக்கு ஐ.நா.வின் அருமையான பரிசு இது’ என்று அவர் ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT