Published : 20 Sep 2018 11:04 AM
Last Updated : 20 Sep 2018 11:04 AM
இந்தியா பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி இம்ரான்கான் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது முதல், பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும், பாகிஸ்தான் இனி எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது என்றும், மக்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் என்றம் தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
இதற்கு பிரதமர் மோடி தரப்பில், பாகிஸ்தானுடன் அமைதியான உறவு ஏற்பட இந்தியா உறுதியளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2016 ல் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கான உறவு முற்றிலுமாக முறிந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT