Published : 27 Jun 2019 04:36 PM
Last Updated : 27 Jun 2019 04:36 PM

பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் சென்ற ஆப்கான் அதிபர்

இரு நாடுகளின்  நல்லுறவு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாகிஸ்தான் சென்றிருக்கிறார்.

பாகிஸ்தான் சென்றடைந்த ஆப்கான் அதிபரை பாகிஸ்தான் அதிகாரிகள் 21 குண்டுகள் முழுங்க வரவேற்றனர்.

ஆப்கானிஸ்தான் அதிபருடன் அமைச்சர்கள், ஆலோசகர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவுடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க  இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஷ்ரப் கானியின் இந்தப் பயணத்தில் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை  முக்கியதுவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஷ்ரப் கானியின் மூன்றாவது பாகிஸ்தான் பயணம் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x