Published : 24 Jun 2019 05:56 PM
Last Updated : 24 Jun 2019 05:56 PM

இராக் படைகள் தாக்குதல்: 14 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி

இராக் படைகள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில்  14 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து இராக் தீவிரவாத பாதுகாப்புப் படை தரப்பில்,” இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்குக்  நகரத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக  பாதுகாப்புப் படைகள் கடந்த சில நாட்களாகவே தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் நடந்த  சண்டையில் 14 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் அரசு  நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக இராக் அரசு அறிவித்தது.

எனினும்  நாட்டின் சில இடங்களில் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் சணடையிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x