Published : 25 Jun 2019 02:55 PM
Last Updated : 25 Jun 2019 02:55 PM

அமெரிக்கா பொய் சொல்கிறது: ஈரான்

அமெரிக்கா பேச்சுவார்த்தை என பொய் சொல்வதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி நேரலையில் கூறும்போது, ''ஈரானின் மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத்தும் உள்ளார்.

நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அதே வேளையில் வெளியுறவுத் துறை அமைச்சர் மீது பொருளாதாரத் தடை விதிப்பீர்களா? இது  நீங்கள் பொய் சொல்வதைத்தான் காட்டுகிறது'' என்றார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ''ஈரானுடன் எங்களது பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், காதில் விழாதது போல் ஈரான்தான் உள்ளது'' என்று கூறியிருந்தார்.

இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பதிலளித்துள்ளார்.

கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இப்படி தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x